Header Ads

test

இலங்கைக்கு தொடர்ந்தும் உதவும் இந்தியா.

 இந்தியா இலங்கைக்கு வழங்கிய உதவிகளை ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையில் (UNGA) தெரிவித்துள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சர், S. ஜெய்சங்கர் பொதுச்சபையின் 77 ஆவது அமர்வில், உரையாற்றும் போது, எரிபொருள், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் வர்த்தக தீர்வுக்காக இந்தியா 3.8 பில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது என்று கூறியுள்ளார்.

உலகளாவிய கவனம் உக்ரைன் மீது இருக்கும் அதே வேளையில், இந்தியா, குறிப்பாக தமது சொந்த அண்டை நாடுகளின் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்று ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

பலவீனமான பொருளாதாரங்களில் கடன் குவிப்பு குறிப்பாக கவலை அளிக்கிறது. அத்தகைய காலங்களில், சர்வதேச சமூகம் குறுகிய தேசிய நிகழ்ச்சி நிரல்களுக்கு அப்பால் செல்ல வேண்டும் என்று இந்தியா நம்புகின்றது.

இந்த நேரத்தில் இந்தியா, தனது பங்கிற்கு, விதிவிலக்கான நேரங்களில் விதிவிலக்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். பேரிடர் மீட்பு அல்லது மனிதாபிமான உதவி எதுவாக இருந்தாலும், இந்தியா வலுவாக இருந்து வருகின்றது.

குறிப்பாக அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு பங்களிக்கிறது என்று ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

இதேவேளை இந்த ஆண்டு பயங்கரவாத எதிர்ப்பு குழுவின் தலைமை நாடாக, இந்தியா தனது சிறப்புக் கூட்டத்தை மும்பை மற்றும் புது டில்லியில் நடத்தும் என்றும் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார். அத்துடன் இதில் பங்கேற்க அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். 


No comments