Header Ads

test

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மீது விரிவுரையாளர் மேற்கொண்ட தாக்குதலில் பலர் படுகாயம்.

 மட்டக்களப்பில் உள்ள விபுலானந்தா கிழக்கு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர், மாணவர்கள் மீது மேற்கொண்ட தாக்குதலில் ஐவர் படுகாயமடைந்ததுடன் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இச்சம்பவமானது இன்று (29) இரவு இடம்பெற்றுள்ளது.

குறித்த விரிவுரையாளரின் செயற்பாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்கலைக்கழக அதிபர் மற்றும் ஆசிரியர்களை பல்கலைக்கழகத்தில் வைத்து பூட்டி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மாணவர்களிடம் சம்பவம் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.  



No comments