Header Ads

test

நீர் வீழ்ச்சியில் காணாமல் போன மூவரில் 16 வயது சிறுமி சடலமாக மீட்பு.

 ஹங்வெல்ல – தும்மோதர குமாரி நீர் வீழ்ச்சியில் நீராடச் சென்ற சிறுமிகள் இருவர் உட்பட்ட மூவர் காணமல் போயிருந்த நிலையில் 16வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் (30) பிற்பகல் 14, 16 ஆகிய வயதுகளையுடைய இரண்டு சிறுமிகளும் 29 வயதுடைய யுவதியொருவரும் குறித்த நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற நிலையில் காணாமல் போயிருந்தனர்.

இதனையடுத்து காணாமல்போன மூவரையும் தேடும் பணிகளை ஹங்வெல்ல பொலிஸாரும், சுழியோடல் குழுவினரும் இணைந்து முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.


No comments