இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்தில் 563 பேருக்கு கொரோனா தொற்று - அச்சத்தில் மக்கள்.
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்தில் 563 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்றைய தினம் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து இலங்கையில் 5இலட்சத்து 58 ஆயிரத்து 746 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 14 ஆயிரத்து 962 பேர் மரணமடைந்திருப்பதாக தெரியவந்துள்ளது. இலங்கையில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 11 ஆயிரத்து 962 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 228 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில், இதுவரையில் 5இலட்சத்து 60 ஆயிரத்து 313 பேர் மொத்தமாக குணமடைந்துள்ளனர்.
Post a Comment