யாழில் தாழிறங்கிய வீதியால் ஏற்பட்டுள்ள பரபரப்பு.
யாழ்.கோண்டாவில் அரசடி பகுதி பிரதான வீதியில் திடீரென குழி ஒன்று உருவானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அப்பகுதி ஊடாக சென்ற பாரவூர்தி ஒன்றின் பின் சக்கரம் அக்குழியில் திடீரென தாழிறங்கியுள்ளது.
இந்நிலையில் குறித்த குழி தொடர்பாக பல தடவைகள் சுட்டிக்காட்டப்பட்டதாகவும் அது குறித்து முறையான நடவடிக்கையினை பொறுப்பு வாய்ந்தவர்கள் எடுக்கவில்லை என அப்பகுதி இளைஞர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
Post a Comment