Header Ads

test

சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல்.

 கைதான சந்தேகநபர் தாக்கியதில் பொலிஸார் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பூண்டுலோயா பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில்     சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களையும் கடுமையாக தாக்கியுள்ளார்.

இந்நிலையில் தாக்குதலுக்குள்ளான இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் பூண்டுலோயா மற்றும் நாவலப்பிட்டி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸாரை தாக்கிய சந்தேகநபர் 48 வயதுடைய பூண்டுலோயா பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் கூறப்படுகின்றது. மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பூண்டுலோயா பொலிஸார் முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.


No comments