Header Ads

test

5 வயது சிறுமிக்கு அயல் வீட்டாரால் நேர்ந்த கொடூரம்.

 நுகேகொடவில் 5 வயது சிறுமியை மிகவும் மோசமான முறையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இளம் குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர் 20 வயதான திருமணமானவர் எனவும் பாதிக்கப்பட்ட சிறுமியின் அயல் வீட்டில் வசித்துவருபவர் எனவும் தெரியவந்துள்ளது. 

சிறுமியை கொடூரமாக துன்புறுத்தியதுடன்  சிறுமியை துஷ்பிரயோகம் செய்யும் காணொளியை  சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகவும் தெரியவந்துள்ளது.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்க்கொண்டுள்ளனர்.


No comments