Header Ads

test

இலங்கை ஜனாதிபதியைச் சந்தித்த அமெரிக்க தேசிய பாதுகாப்புச் சபையின் உயர் அதிகாரிகள்.

 அமெரிக்கா தேசிய பாதுகாப்புச் சபையின் தெற்காசியப் பிரிவின் சிரேஷ்ட பணிப்பாளர் ரியர் அட்மிரல் ஐலின் லொவபக்கர் ( Eileen Laubacher) இன்று (11) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார்.

ஜனாதிபதியை சந்தித்த அமெரிக்காவின் பாதுகாப்பு உயர் அதிகாரி | Top Us Defense Official Meets President

நாட்டின் தற்போதைய பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் முன்னெடுத்துள்ள சாதகமான நடவடிக்கைகளுக்கு அமெரிக்க அரசாங்கத்தின் பாராட்டுகளை  ஐலின் லொவபக்கர் ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.

ஜனாதிபதியை சந்தித்த அமெரிக்காவின் பாதுகாப்பு உயர் அதிகாரி | Top Us Defense Official Meets President

இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பொருளாதாரத் திட்டங்கள் குறித்து லொவபக்கருக்கு விளக்கமளித்த ஜனாதிபதி, போதைப்பொருள் கடத்தலை தடுப்பது மற்றும் அந்த நோக்கத்திற்காக கடல்சார் ஒத்துழைப்பைப் பெறுவது தொடர்பிலும் கலந்துரையாடினார்.

ஜனாதிபதியை சந்தித்த அமெரிக்காவின் பாதுகாப்பு உயர் அதிகாரி | Top Us Defense Official Meets President

இலங்கையின் கூட்டிணைவை அமெரிக்கா பாராட்டுகின்ற அதேவேளை, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்த ஆவலுடன் இருப்பதாகவும் லொவபக்கர் இங்கு மேலும் கூறினார்.   

இந்த சந்திப்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சாங்க் மற்றும் உயர் அதிகாரிகளும் கலந்துக்கொண்டனர். 


No comments