Header Ads

test

யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு.

 திருகோணமலை - கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேரமடுவ பகுதியில் யானையின் தாக்குதலினால் இன்று ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்  நபர் மெதிரிகிரிய- விஜேபுர பகுதியைச் சேர்ந்த சுனில் (40வயது) எனவும் தெரியவருகின்றது.

மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த குறித்த நபரை யானை தாக்கியதாகவும், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது மெதிரிகிரிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை மெதிரிகிரிய பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.


No comments