Header Ads

test

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவத்தினர் துப்பாக்கி பிரயோகம் - தமிழர் பகுதியில் இடம்பெற்ற அசம்பாவிதம்.

 முல்லைத்தீவு - விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவத்தினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றிரவு கடமையில் நின்ற இராணுவத்தினருடன் பொதுமகன் ஒருவர் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட போது கைகலப்பாக மாறிய நிலையில், இராணுவத்தினர் வானத்தை நோக்கி துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றுள்ளதுடன், இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 இதன் காரணமாக குறித்த பகுதியில் அமைதியின்மை நிலவுவதாக தெரியவந்துள்ளது.



No comments