Header Ads

test

9 வயது சிறுவனுக்கு உணவில் விசம் வைத்துக் கொன்ற தாய்.

தாய் ஒருவர் தனது மகனுக்கு இறைச்சியில் விசம் கொடுத்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொடூர சம்பவம்  நேற்று மாலிம்படை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கந்தஹேன, அல்கிரிய, தெலிஜ்ஜவில பகுதியைச் சேர்ந்த 9 வயதான சிறுவனே சம்பவத்தில்  உயிரிழந்துள்ளார்.

வீட்டிலிருந்த 3 வயதான குழந்தையும் 9 வயதான மகனும் அழும் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டு  உறவினர் ஒருவர் குறித்த வீட்டுக்குச் சென்று பார்வையிட்ட போது இந்தச் சம்பவம் தொடர்பில் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து  உடனடியாக சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவர்  இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் குழந்தையின் தாய் வீட்டிலிருந்து தலைமறைவாகியுள்ள நிலையில், பொலிசார்   தாயாரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.


No comments