Header Ads

test

குடிநீர் பிரச்சினையால் அவதியுறும் முல்லைத்தீவு மக்கள்.

 முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்கு உட்பட்ட கிராமங்களில் சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் பிரதேச மக்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

இதற்கமைய, மந்துவில் மற்றும் மல்லிகைத்தீவு ஆகிய கிராமங்களில் குடிநீர் பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக இந்த பிரதேசத்தில் காணப்படுகின்ற கிணறுகளில் அதிகமான கிணறுகள் ஆழங் கூடிய கிணறுகளாக காணப்படுகின்றன.

அதேவேளை பெரும்பாலான கிணறுகள் நீர் வற்றியும் காணப்படுகின்றன.இந்த நிலையில் சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கேப்பாப்புலவு மற்றும் பிலக் குடியிருப்பு ஆகிய பகுதிகளிலும் குடிநீர் பற்றாக்குறை காணப்படுகின்றது.

குறிப்பாக இந்த பிரதேசத்திலே அமைக்கப்பட்டிருக்கும் குழாய் கிணறுகள் பழுதடைந்த நிலையில் காணப்படுவதாகவும் அவற்றைப் புனரமைத்து தருமாறும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 



No comments