Header Ads

test

வீடொன்றில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தால் நபர் ஒருவருக்கு நேர்ந்த துயரம்.

 எல்பிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் வெடிப்பு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

எல்பிட்டிய பிரதேசத்தின் கெடபல, நாகஹதென்ன பகுதியில் உள்ள வீடொன்றிலேயே இன்று காலை வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

எல்பிட்டிய நகரின் பிரபல வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான குறித்த வீட்டில் அண்மைக்காலமாக யாரும் குடியிருக்கவில்லை என்று தெரியவந்துள்ளது.

இன்று காலை அந்த வர்த்தகரும், அவரது மனைவியும் அவர்களது வீட்டைப் பார்வையிட சென்றிருந்தபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

இதன்போது வர்த்தகர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், வீடும் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.



No comments