Header Ads

test

சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சித்த 91 பேர் கைது.

 நாட்டை விட்டு சட்டவிரோதமான முறையில் தப்பிச் செல்ல முயற்சித்த 91 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

சிலாபம் மற்றும் மாரவில ஆகிய பகுதிகளில் இந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

படகு மூலம் சட்டவிரோதமான முறையில் நாட்டை வெளியேறிச் செல்ல இந்த நபர்கள் முயற்சித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் தற்பொழுது நிலவி வரும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளின் காரணமாக சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டுத் தப்பிச் செல்வோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.







No comments