Header Ads

test

யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் நபர் ஒருவர் உயிரிழப்பு.

 யாழ்ப்பாணம் - கொட்டடி, நாவாந்துறை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

நேற்று இரவு 9.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 31 வயதான நவரட்ணராஜா சங்கித் என்பவர் உயிரிழந்ததுடன், அவருடன் பயணித்தவர் காயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,

அதிவேகமாக மோட்டார் வாகனத்தில் பயணித்தமையே விபத்துக்குக் காரணமெனத் தெரியவரும் நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


No comments