Header Ads

test

முல்லைத்தீவில் மக்கள் பணத்தை சூறையாடிய நபர்.

தமிழ்குடில் ஒன்றியம் புலம்பெயர் தமிழர்களின் உழைப்பில் கிடைக்கின்ற நிதியின் ஊடாக தாயாக பகுதியில் பல அளப்பெரும் சேவைகளை தொடர்ச்சியாக செயற்படுத்தி வருகின்றது.

குறித்த ஒன்றியமானது முல்லைத்தீவு கைவேலிப் பகுதியில் சிறுவர் பாடசாலை ஒன்றை நிறுவி, இலவச கல்விச் செயற்பாட்டை முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதே போன்று இளைஞர் யுவதிகளை இணைத்து பல சமூக நலன் செயற்பாடுகள் மற்றும் வாழ்வாதார செயற்பாடுகள் குறித்த ஒன்றியத்தின் ஊடாக இடம்பெற்றுவருகின்றன.

தமிழ்க்குடில் ஒன்றியத்தின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளராக கடமையாற்றிய இ.உதயகுமார் அவர்கள் 02.11.2021 அன்று உத்தியோகபூர்வமாக குறித்த ஒன்றியத்தின் கடமையிலிருந்து விலகியுள்ளார்.

இந் நபர் தமிழ்க்குடில் ஒன்றியத்தின் பெறுமதியான உடைமைகள் மற்றும் நிதி என்பவற்றை மீள கையளிக்காது தம் வசம் கையகப்படுத்தியுள்ளதாகவும்  ஒன்றியத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதே வேளை தமிழ்க்குடில் ஒன்றியத்தின் செயற்பாடுகளுக்கும் இ.உதயகுமார் அவர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments