Header Ads

test

பாடசாலை சென்ற பிள்ளைகளை அழைத்து வரச் சென்ற தாயருக்கு நேர்ந்த துயரம்.

 யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீசாலை வடக்கை சேர்ந்த 52 வயதான சிறீதரன் செல்வராணி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 14ஆம் திகதி பிற்பகல் 2 மணியளவில் மீசாலை ஐயா கடையடிப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த குறித்த பெண் மீது முச்சக்கரவண்டி மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

படுகாயம் அடைந்த பெண் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். எனினும் சிகிச்சையின் பலனின்றி நேற்று அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாடசாலையிலுள்ள பிள்ளைகளை வீட்டுக்கு அழைத்து வருவதற்கான சென்ற மூன்று பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளார். விபத்தை ஏற்படுத்தி தப்பிச் சென்ற முச்சக்கர வண்டி சாரதியை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த முச்சக்கரவண்டி தொடர்பான தகவல் தெரிந்தால் தமக்கு தகவல் வழங்குமாறு சாவகச்சேரி பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.


No comments