Header Ads

test

வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பியோட்டம்.

 வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் உள்ள வீடுகளில் திருட்டில் ஈடுபட்டவர் எனும் சந்தேகத்தின் பேரில் வவுனியா - கூமாங்குளத்தினை சேர்ந்த 20 வயது மதிக்கக்தக்க இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இவர் இன்று (18.03) அதிகாலை சிறைச்சாலையிலிருந்து தப்பித்துச் சென்றுள்ளார்.

தப்பிச்சென்ற இக் கைதியைத் தேடி வவுனியா சிறைக்காவலர்கள், வவுனியா பொலிஸாருடன் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


No comments