Header Ads

test

துப்பாக்கியால் சுட்டு நபர் ஒருவர் படுகொலை.

மிதிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துர்கி கிராமத்தில் நேற்று இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதன்போது மிதிகம பிரதேசத்தில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

படுகாயமடைந்த 46 வயதுடைய நபர் வலான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேக நபரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவரை கைது செய்ய விசாரணை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

No comments