Header Ads

test

சம்பளம் வழங்காததால் உயிரை மாய்த்த நபர்.

 பாணந்துறையில் இரவு நேர பாதுகாப்பு பிரிவில் பணியாற்றிய நபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

63 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பாடசாலையின் நிர்மாணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

நேற்று அதிகாலை 3.45 மணியளவில் குறித்த நபர் தற்கொலை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழப்பதற்கு முன்னர் மனைவிக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்திய நபர், தான் பணியாற்றும் தனியார் பாதுகாப்பு பிரிவின் பிரதானி சம்பளம் வழங்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.


No comments