Header Ads

test

யாழில் காவல்துறை அதிகாரி மர்மமான முறையில் மரணம் - வீட்டிலிருந்து சடலம் மீட்பு.

 இளவாலை காவல் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் காவல்துறை உத்தியோகத்தர்  அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கீரிமலை, கூவில் வீதியில் உள்ள வாடகை வீட்டில் இன்று காலை அவர் சடலமாக மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பைச் சேர்ந்த அந்தோனிப்பிள்ளை ரமணன் (வயது-47) என்ற காவல்துறை உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளார். அவரது குடும்பத்தினர் புத்தாண்டை முன்னிட்டு மட்டக்களப்பு சென்றிருந்த நிலையில் காவல்துறை உத்தியோகத்தர் வீட்டில் தனிமையில் இருந்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

அவரது உயிரிழப்புக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


No comments