Header Ads

test

விநாயகர் ஆலயமொன்று விசமிகளால் தீக்கிரை.

 அக்கரப்பத்தனை நகரத்தில் உள்ள சிறி சித்தி விநாயகர் ஆலயத்தில் விக்கிரங்கள் மற்றும் சிலைகள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளன. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது.

இச்சம்பவம் இன்று (02) அதிகாலை இடம்பெற்றிருக்கலாம் என நகரவாசிகள் தெரிவிக்கின்றனர்.

அக்கரப்பத்தனை நகரத்தில் இதுவரை காலமாக ஆலயம் ஒன்று இல்லாத நிலையில், புதிதாக புனரமைக்கப்பட்ட ஆலயத்திலேயே இவ்வாறு சிலைகள் மற்றும் விக்கிரங்கள் உடைக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆலயத்தில் இம்மாதம் 19ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை கும்பாபிஷேகமும் இடம்பெறவுள்ளது. இந்த நிலையிலேயே இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதனால், அக்கரப்பத்தனை நகர வர்த்தகர்கள் அனைத்து கடைகளையும் மூடி ஆலயத்திற்கு முன்பாக ஒன்றுகூடி தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் அக்கரப்பத்தனை காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டின் பிரகாரம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




No comments