Header Ads

test

யாழ்தேவி புகையிரதம் மீண்டும் சேவையை ஆரம்பிக்கவுள்ளது.

 கல்கிஸையிலிருந்து காங்கேசன்துறை வரையில் பயணிக்கும் யாழ்தேவி புகையிரத சேவை இன்றிலிருந்து ஆரம்பமாகவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி இன்று காலை 5.55 மணியளவில் கால்கிஸை புகையிரத நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது. பயணத்தடை காரணமாக ஆறு மாத காலமாக இடைநிறுத்தப்பட்டிருந்த இந்த புகையிரத சேவை மீளவும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்த புகையிரதம் மீண்டும் நாளை காலை 5.30 மணியளவில் காங்கேசன்துறையிலிருந்து கல்கிஸை வரை மீண்டும் பயணிக்குமென புகையிரத திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.


No comments