Header Ads

test

கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்து.

 கிளிநொச்சி இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவ்விபத்து சம்பவம் இன்று பகல் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மேலும் சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

பரந்தன் திசையிலிருந்து கிளிநொச்சி நகருக்குள் நுழைந்த கன்டர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து நிலையத்தில் தரித்திருந்த முச்சக்கரவண்டி மற்றும் காருடன் மோதியுள்ளது.


விபத்தில் சிக்குண்ட இருவர் காயமடைந்த நிலயைில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கன்டர் வாகனம் பகுதியளவில் சேதமடைந்ததுடன், முச்சக்கரவண்டி மற்றும் கார் ஆகியனவும் சேதமடைந்துள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

இதேவேளை கடந்த 15ம் திகதி விபத்த இடம்பெற்ற பகுதியை அண்மித்துள்ள கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயம் முன்பாக பாதசாரி கடவையில் இவ்வாறானதொரு விபத்தின்போது பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்திருந்ததுடன், மற்றுமொரு மாணவி படுகாயமடைந்திருந்தார்.

அதிகரித்த வேகம், நெரிசல் காரணமாக இவ்வாறான விபத்துக்கள் கிளிநொச்சியில் பதிவாகி வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

No comments