Header Ads

test

யாழில் மீட்கப்பட்ட புலிகளின் அதி சக்தி வாய்ந்த கிளைமோர்.

 ஊர்காவற்துறை பகுதியில் இருந்து புலிகளின் கிளைமோர் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கிளைமோர் இன்று (21) ஞாயிற்றுகிழமை ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேலணை, அம்பிகா நகர் பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.

சொந்தமான தனியார் காணி ஒன்றில், மண்ணில் புதைந்திருந்த நிலையில் குறித்த சக்தி வாய்ந்த கிளைமோர் மீட்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த காணியின் உரிமையாளர் வெளிநாட்டில் வசிப்பதாக தகவல் தெரியவந்துள்ளது. குறித்த கிளைமோரை அவதானித்த பிரதேசவாசிகள் இராணுவத்தினருக்கு இது தொடர்பாக தகவல் வழங்கினர்.

அவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த வெடிபொருளை மீட்ட இராணுவத்தினர் அதனை பலாலி இராணுவ முகாமிற்கு எடுத்துச் செல்லவுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

மேலும் குறித்த கிளைமோரில் கொல்பவன் வெல்வான், எதிரியின் பக்கம், தயாரிப்பு தமிழீழம் என்ற வசனங்கள் பொறிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





No comments