Header Ads

test

வவுனியாவில் வீதியில் செல்பவர்களை இடைமறித்து வாள்வெட்டு - பலர் வைத்தியசாலையில் அனுமதி.

 வவுனியா - கோவில்குளம் பகுதியில் இளைஞர் குழுவொன்று, வீதியால் செல்பவர்களை வழிமறித்து வாள் மற்றும் கோடரிகளால் தாக்கியதில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மதுபோதையில் நின்றிருந்த குறித்த நபர்கள், வீதியால் செல்பவர்களை தாக்கியதுடன் வீடுகள் சிலவற்றிற்குள் புகுந்து உறங்கிக் கொண்டிருந்தவர்களையும் தாக்கியுள்ளனர்.

இதனால் பெண் உட்பட நால்வர் காயமடைந்த நிலையில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




No comments