Header Ads

test

வீடொன்றினுள் பலவந்தமாக நுழைந்த குழுவொன்றால் நபர் ஒருவர் அடித்துக் கொலை.

 வீடொன்றினுள் பலவந்தமாக நுழைந்த குழு ஒன்று அங்கிருந்த நபர் ஒருவரை அடித்து கொலை செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் பதுளை,லிதமுல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், 

வீடு ஒன்றிற்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்தவரை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். இதன்போது படுகாயமடைந்த நபரை பதுளை வைத்தியசாலையில் அனுமதித்த போது அவர் உயிரிழந்துள்ளார். 

பதுளை, லிதமுல்ல பகுதியை சேர்ந்த 65 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 சம்பவம் தொடர்பில்  சந்தேகத்தின் பேரில் பதுளை பகுதியை சேர்ந்த 21, 24 மற்றும் 31 வயதுடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


No comments