Header Ads

test

வவுனியா பிரதேச செயலகம் பொது மக்களுக்கு விடுத்துள்ள விசேட அறிவித்தல்.

 கோவிட் தொற்றுக்கான தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள் மாத்திரமே பிரதேச செயலகத்திற்குள் அனுமதிக்கப்பட்டு சேவைகளை பெற்றுக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என வவுனியா பிரதேச செயலகம் அறிவித்துள்ளது.

அந்த வகையில் வவுனியா பிரதேச செயலகத்திற்குள் சேவை பெறுவதற்கு வருகை தருவோர் தடுப்பூசி அட்டையினையும், தேசிய அடையாள அட்டையினையும் தம்வசம் வைத்திருப்பது அவசியமாவதுடன், குறைந்தது ஒரு தடுப்பூசியினையாவது பெற்றிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறு தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாமல், அட்டை இன்றி வருகை தருவோருக்கு நுழைவாயிலில் வைத்தே சேவை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 குறித்த நடைமுறை இன்றைய தினத்திலிருந்து நடைமுறைக்கு வரும் என குறிப்பிடப்ட்டுள்ளது.


No comments