Header Ads

test

இலங்கைக்கான தடையை நீக்கவுள்ள மற்றுமொரு நாடு.

 கொரோனா பரவல் காரணமாக இலங்கை பயணிகளுக்கு கட்டார் அரசாங்கம் விதித்திருந்த தடை நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி எதிர்வரும் 6 ஆம் திகதியில் இருந்து இலங்கை மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட சில நாட்டவர்கள் தமது நாட்டிற்குள் பிரவேசிக்கலாம் என கட்டார் அரசாங்கம் அறிவித்துள்ளது.

மேலும் 12 வயதிற்கு மேற்பட்ட முழுமையாகத் தடுப்பூசி ஏற்றியவர்கள் 2 நாட்கள் தனிமைப்படுத்தலின் பின்னர் நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என கட்டார் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.


No comments