Header Ads

test

மட்டக்களப்பு மண் ராஜபக்சர்களின் கூடாரமா என கேள்வி எழுப்பியுள்ள சிறுமி.

 மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குப்பட்ட புனாணை மேற்கு பகுதிக்குட்பட்ட அணைக்கட்டு பகுதியில் உள்ள 6 நபர்களுக்குரிய காணியில் கிறவல் அகழ்வுக்கு அனுமதி வழங்கப்பட்டு பாரிய குழி தோண்டி கிறவல் அகழப்பட்டு வருகின்றது.

இன்று அப்பகுதி மக்கள் கிறவல் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் மட்டக்களப்பு மண் ராஜபக்ஸாக்களின் கூடாரமா என்ற பதாதைகளுடன் சிறுவர்களும் இந்த கவனயீர்ப்பில் ஈடுபட்டிருந்தனர்.

சுமார் ஆறு ஏக்கர் நிலப்பரப்பில் அதிகளவான பகுதி கிரவல் தோண்டப்பட்டு பெரிய அளவிலான மரங்களும் அழிக்கப்பட்டுள்ளன. தற்பொழுது குறித்த காணியில் பயன்தரும் மாமரம், மாதுளை மரம் மரவள்ளி போன்ற பயிர்கள் செய்கை பண்ணப்பட்டு உள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 30 பேர் கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

2015 ஆம் ஆண்டு தொடக்கம் குறித்த காணியில் பயிர்ச் செய்கைக்காக பிரதேச செயலாளரினால் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்ததுடன் தற்போது அரச காணியில் எவ்வாறு பயிர் செய்ய முடியும் என பிரதேச செயலாளர் கேட்பதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளார்கள்.

சந்திவெளியில் உள்ள ஒரு தனி நபருக்கு கிறவல் அகழ்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் கிறவல் அகழ்விற்கு எதிராக வாழைச்சேனை பொலிஸில் ஆறு நபர்களும் முறைப்பாடு செய்துள்ளனர் .

குறித்த விடயம் தொடர்பாக பிரதேச செயலாளரை வினவியபோது குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். 





No comments