Header Ads

test

அதிகளவானோர் நாட்டை விட்டு வெளியேறுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவிப்பு.

 கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 56,406 புதிய கடவுச்சீட்டுக்களை வழங்கியுள்ளதாக இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. ஜூலை மாதத்தில், 27,326 புதிய கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டன.

அனைத்து நாடுகளுக்குமான புதிய கடவுச்சீட்டுகள் 28,903 ஓகஸ்ட் மாதத்தில் வழங்கப்பட்டதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில், ஓகஸ்ட் 31 வரை, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் 161,820 புதிய பாஸ்போர்ட்களை வழங்கியுள்ளது.

2020 உடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை அதிகரித்து வரும் போக்கைக் காட்டுகிறது, 2020 இல் ஆண்டு முழுவதும் மொத்தம் 204,081 புதிய பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டன.


No comments