Header Ads

test

தூக்கில் தொங்கிய நிலையில் வீதி ஓரத்தில் சடலம்

 வவுனியா - வேப்பங்குளம் பகுதியில் வீதி ஓரத்தில் இருந்த மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.  

குறித்த பகுதியில் சடலம் ஒன்று இருப்பதனை இன்று காலை அவதானித்த பொதுமக்கள் இது தொடர்பாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தியிருந்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தினை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதில் வவுனியா உக்கிளாங்குளம் பகுதியைச்  சேர்நத நபர் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments