Header Ads

test

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை விடுத்துள்ள அறிவித்தல்.

 வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் நடைமுறையில் உள்ள பார்வையாளர்களுக்கான கட்டுப்பாடுகள் மற்றும் கொரோனா தடுப்பூசிகளுக்கு மக்கள் வெளிப்படுத்தியுள்ள ஆதரவிற்கு நன்றியை தெரிவிப்பதுடன், தடுப்பூசியை பெற்றுகொள்ள அனைவரும் முன்வர வேண்டுமென வைத்தியசாலை பணிப்பாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

மீண்டும் கொரோனா நோய்தாக்கம் நாடளாவிய ரீதியில் அதிகரித்து வருவதுடன் ஒட்சிசன் தேவையான நோயாளிகளும் அதிகரித்துச் செல்கின்றனர்.

வவுனியா மாவட்டத்திலும் நோயாளர் எண்ணிக்கை அதிகரித்து செல்வதுடன் மாவட்ட பொது வைத்தியசாலையின் ஒட்சிசன் பாவனையளவும் பாரிய அளவில் அதிகரித்துள்ளது.

மாவட்ட மக்கள் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதோடு மட்டுமல்லாது சுகாதார நடைமுறைகளை இடைவிடாது பின்பற்றுவது, தங்களையும் தமது மாவட்டத்தையும் பாதுகாப்பானதாக வைத்திருக்க இன்றியமையாததாகும்.

சுகாதாரத் துறையினரது அயராத முயற்சியுடன் மக்களினது அர்ப்பணிப்பான ஒத்துழைப்புமே, கடுமையான இந் நிலைமையிலிருந்து முழுநாட்டினையும் வெளிக்கொணரவல்ல நடைமுறையாகுமென சுகாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ள நிலையில், மக்கள் இது தொடர்பில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


No comments