யாழில் உருக்குலைந்த நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு.
யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குட்டிப்புலம் பகுதியில் உள்ள தோட்ட கிணற்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சடலமாக மீட்கப்பட்டவர் சுன்னாகம் மேற்கு ஊரெழுவைச் சேர்ந்த இராசதுரை சுதாகரன் (வயது 36) என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
குறித்த தோட்ட கிணற்றில் சடலம் காணப்படுவதாக சுன்னாகம் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து அங்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதனால் சில தினங்களுக்கு முன்னரே இவர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Post a Comment