Header Ads

test

பயணத்தடை தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்.

நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணத்தடை நீக்கப்பட்டுள்ளதையடுத்து எதிர்வரும் வாரங்களில் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஏதாவது ஒரு முறையில் தினசரி தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்தால் மீண்டும் பயணத்தடையை அமுல்படுத்த நேரிடுமெனவும் இராணுவ தளபதி எச்சரித்துள்ளார்.

இதே முறையில் தொற்றாளர் எண்ணிக்கையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு மக்கள் உதவ வேண்டும் எனவும் தொற்றாளர் அதிகரித்தால் பயணத்தடை அல்லது முடக்க நிலையை அமுல்படுத்த வேண்டிய நிலைமை ஏற்படலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார். 


No comments