Header Ads

test

ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசியின் முதல் தொகுதி நாட்டை வந்தடைந்துள்ளது.

 ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசியின் முதல் தொகுதி நாட்டை வந்தடைந்துள்ளது. அவை நேற்றிரவு இலங்கையை வந்தடைந்ததாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அதன்படி, முதல் தொகுதியில் 15 ஆயிரம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் நாட்டுக்கு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தத் தடுப்பூசிகளை பொறுப்பேற்பற இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன, அவற்றினை சுகாதார அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அண்மையில் ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசியை நாட்டின் அவசரத் தேவைக்காகப் பயன்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.

அதற்கமைய, ஏழு மில்லியன் தடுப்பூசிகளை 69.65 மில்லியன் அமெரிக்க டொலருக்கு ரஷ்யாவிடம் இருந்து கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.   


No comments