Header Ads

test

கடந்த 24 மணிநேரத்தில் நுவரெலியா மாவட்டத்தில் 104 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று.

 கடந்த 24 மணிநேரத்தில் நுவரெலியா மாவட்டத்தில் 104 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கொரோனா தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ஹற்றன் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 23 பேருக்கும், வலப்பனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 23 பேருக்கும், நுவரெலியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 23 பேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், அம்பகமுவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஆறு பேரும், பொகவந்தலாவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஐவரும், டிக்கோயா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஐவரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கினிகத்தேனை, கந்தபளை, நோர்வூட், லிந்துலை மற்றும் ராகலை ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த ஒக்டோபர் 24ஆம் திகதி முதல் நேற்று வரை நுவரெலியா மாவட்டத்தில் ஆயிரத்து 684 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளமை குரிப்பிடத்தக்கது.


No comments