Header Ads

test

கூரிய ஆயுதத்தால் தாக்கி மகனை படுகொலை செய்த தந்தை.

 மொரவக்க, பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். தந்தை மகனுக்கிடையில் இடம்பெற்ற தகராறு காரணமாகவே இந்த படுகொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

மொரவக்க- அலபலாதெனிய பிரதேசத்தில் குடும்பத் தகராறு காரணமாக தந்தையே அவரது மகனை கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் 33 வயதுடைய அலபலாதெனிய, நயாதொல பிரதேசத்தை சேர்ந்த நபரே படுகொலை செய்யப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


No comments