Header Ads

test

சிவராத்திரி தினத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்.

 மகா சிவராத்திாி என்றால் சிவபெருமானின் மிகப் பொிய இரவு என்று பொருள். இந்த விழா மாசி மாதத்தில் வருகிறது.

மகா சிவராத்திாி அன்று இரவு முழுவதும் பக்தா்கள் தூங்காமல் கண் விழித்து சிவபெருமானுக்கு தங்களது பிராா்த்தனைகளையும் வேண்டுதல்களையும் செலுத்துவர்.

அதோடு இந்த விழாவின் இன்னொரு முக்கிய சிறப்பு அம்சம் என்னவென்றால் நோன்பு அல்லது மகா சிவராத்திாி விரதம் மேற்கொள்வது ஆகும்.

பக்தர்களில் சிலா் இந்த நாளன்று நிா்ஜலா என்ற கடுமையான விரதத்தை மேற்கொள்வர். அதாவது மகா சிவராத்திாி நாளன்று தண்ணீா் கூட குடிக்காமல் விரதம் இருப்பர். இந்த கடுமையான விரதத்தைப் பெரும்பாலானோரால் கடைபிடிக்க முடியாது.

ஆகவே பெரும்பாலான பக்தா்கள் அந்த நாளில் விரதம் இருந்தாலும், அதே நேரத்தில் பழங்கள் அல்லது பால் அல்லது காய்கறிகள் அல்லது தானியமில்லா உணவுகளை சிறிதளவு எடுத்துக் கொள்வர். ஆகவே நீங்கள் இந்த ஆண்டு மகா சிவராத்திாி அன்று நோன்பு இருக்க விரும்பினால் கீழ் காணும் உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.

  • உருளைக்கிழங்கு சாா்ந்த எந்த உணவையும் மகா சிவராத்திாி அன்று உண்ணலாம். ஆனால் அந்த உணவுகளில் வெங்காயம், பூண்டு, இஞ்சி மற்றும் மஞ்சள் போன்றவற்றை சோ்க்கக்கூடாது.
  • ஜவ்வாிசி கிச்சடி, ஜவ்வாிசி பக்கோடா, ஜவ்வாிசி வடை போன்ற உணவுகள் மகா சிவராத்திாி அன்று உலகம் முழுவதும் உள்ள பக்தா்களால் உண்ணப்படுகின்றன.
  • சிவபெருமானக்கு பால் மிகவும் ஒரு பிடித்தமான உணவு என்று சொல்லப்படுகிறது. பால் மற்றும் பால் கலந்த பானங்களை இந்த விரதத்தில் அருந்தலாம்.
  • பாதாம் பால், பாலில் உலா் பழங்கள் கலந்து செய்யப்படும் ஒரு வகையான இனிப்புப் பானம், பால் கலந்த ஜவ்வாிசி பாயாசம் போன்ற பானங்களை இந்த சிவராத்திாி விரதத்தின் போது அருந்தலாம்.
  • பொதுவாக மகா சிவராத்திாி உள்ளிட்ட எல்லா பூஜைகள் மற்றும் விரதங்களில் பழங்கள் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கின்றன. ஆகவே பழச் சாட், பழ சாலட்டுகள், மற்றும் பால் பழ ஷேக்ஸ் போன்றவற்றை சிவராத்திாி விரதத்தின் போது சாப்பிடலாம்.
  • பழங்களோடு சோ்த்து பலவகையான உலா்ந்த பழங்களையும் உண்ணலாம். பாதாம் பருப்பு, வால்நட், போிச்சம்பழம், முந்திாிப் பருப்பு, உலா் திராட்சை மற்றும் பாதாம் பழம் போன்றவற்றை உண்ணலாம்.


No comments