Header Ads

test

சிவராத்திரியை முன்னிட்டு முல்லை.மூங்கிலாற்றில் குடிகொண்ட சிவன் - குழப்பத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை.

 புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்க உட்பட்ட மூங்கிலாற்று கிராமத்தில் உள்ள பிரதேச செயலகத்தின் ஆழுகையின் கீழ் உள்ள பொதுக்காணி ஒன்றில் சிவராத்திரியினை முன்னிட்டு நேற்று 10.03.21 அன்று சிவன் சிலை ஒன்ற அமைக்கப்பட்டு கிராம மக்கள் வழிபாடுகளை மேற்கொண்டுவந்த நிலையில் பிரதேச சபையின் தவிசாளர் உறுப்பினர்கள் அந்த இடத்திற்கு பிரசன்னமாகியதால் மக்களுக்கும் சபை உறுப்பினர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

பிரதேச சபையின் அனுமதி பெற்றே அனைத்து ஆலயங்கள் கட்டிடங்கள் அமைக்கவேண்டும் எனதீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமையினை சபையின் உறுப்பினர் எஸ்.குகனேசன் மக்களிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இருந்தும் குறித்த காணி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ளதால் பிரதேச சபை எதுவித நடவடிக்கையும் எடுக்கமுடியாத நிலை உள்ளதாக சபையின் தவிசாளர் அ.தவக்குமார் தெரிவித்துள்ளார்;

இந்த பகுதியில் பல கிறிஸ்தவ சபைகள் காணப்பட்ட போதும் என்னூறுவரையான இந்தது மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள் மக்கள் ஆலயங்களுக்கு செல்லவேண்டுமாக இருந்தால் நீண்டதூரம்தான் செல்லவேண்டும் இதனை கருத்தில் கொண்டு குறித்த பகுதியில் சிவராத்திரியினை முன்னிட்டு சிவன் சிலைஅமைக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

பல சபைகள் மற்றும் ஏனைய மாங்களில் சிலைகள் அனைத்தும் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் அனுமதியுடனா கட்டப்பட்டுள்ளது என்ற கேள்வியினையும் மக்கள் கேட்டுள்ளார்கள்.

இதேவேளை இது குறித்து கிராம சேவையாளருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது என்றும் பிரதேச செயலாளரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கிராமத்தில் கிராம மக்களின் விருப்பிற்கு அமைவாகவே இந்த சிலை வழிபாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ளது என கிராம அமைப்பினர் தெரிவித்துள்ளார்கள்.



No comments