Header Ads

test

முல்லைத்தீவு மாவட்டத்தில் 13 பேருக்கு கொவிட் 19 உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 முல்லைத்தீவு மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மற்றும் விசுவமடு பிரதேசத்தினை சேர்ந்தவர்கள் என 13 பேருக்கு கொவிட் 19 உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. (13.03.21)

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தினை சேர்ந்த 11 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை விட விசுவமடு பாரதி புரத்தினை சேர்ந்த கிளிநொச்சி ஆடைத்தொழில்சாலையில் பணியாற்றும் குடும்பத்தினை சேர்ந்த இருவருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த குடும்பத்துடன் தொடர்பினை பேணியவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.



No comments