Header Ads

test

வைத்தியசாலையின் மாடியிலிருந்து குதித்து இளைஞன் ஒருவர் தற்கொலை - மட்டக்களப்பில் சம்பவம்.!!!

வைத்தியசாலையின் மாடியிலிருந்து குதித்து இளைஞன் ஒருவர் தற்கொலை - மட்டக்களப்பில் சம்பவம்.!!!


மட்டக்களப்பு வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவின் 2 ஆம் மாடியிலிருந்து குதித்து இளைஞனொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞன் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (03) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.


மட்டக்களப்பு பழுகாமம் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய மயூரன் என்ற இளைஞனே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என அறிய முடிகிறது.

குறித்த தற்கொலை சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

No comments