Header Ads

test

தோழர்.மாணிக்கதாசனின் நினைவாக, இன்று அவரது குடும்ப உறவுகள், தோழர்கள், ஆதரவாளர்களினால் “தாகசாந்தி நிலையம்” வவுனியா கோவில்குளத்தில்.!!!

தோழர்.மாணிக்கதாசனின் நினைவாக,  இன்று அவரது குடும்ப உறவுகள், தோழர்கள், ஆதரவாளர்களினால் “தாகசாந்தி நிலையம்” வவுனியா கோவில்குளத்தில்.!!!

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) இராணுவத் தளபதியும், உபதலைவருமான திரு.நாகலிங்கம் மாணிக்கம்ராஜன் (மாணிக்கதாசன்), மற்றும் அவருடன் இணைந்து “விடுதலைக்கு விதையான” திரு.தர்மலிங்கம் தேவராஜா (இளங்கோ), திரு முருகேசு குணரட்ணம் (வினோ) ஆகியோரின் இருபதாவது நினைவுதினம் புளொட் மற்றும் அதன் அரசியல் பிரிவான டிபிஎல்எப் தோழர்கள் ஆதரவாளர்களினால் உலகெங்கும் நினைவு கூரப்படுகிறது.

தோழர்.மாணிக்கதாசனின் நினைவாக,  இன்று அவரது குடும்ப உறவுகள், தோழர்கள், ஆதரவாளர்களினால் “தாகசாந்தி நிலையம்” வவுனியா கோவில்குளம் வீதியில் உள்ள “புளொட்” செயலதிபர் மற்றும் இராணுவத்தளபதி மாணிக்கதாசன் ஆகியோரின் சமாதிக்கு முன்னிலையில் அமைக்கப்பட்டு உள்ளது.

மேற்படி தாகசாந்தி நிலையம் ஊடாக அவ்வீதியால் சென்று வரும் அனைவரும், தாகம் தீர்த்து செல்வதைக் காணக் கூடியதாக உள்ளதுடன் “மறைந்த தோழர்களை நினைவு கூர்ந்து, இன்றைய வெப்ப காலநிலையைக் கருத்தில் கொண்டு, இதுபோன்ற செயற்பாடுகள் வரவேற்கக் கூடியதென” பாராட்டி செல்வதையும் காணக் கூடியதாக உள்ளது.



No comments