Header Ads

test

பதவி விலகிய முன்னாள் அமைச்சர்களான கெளரவ ரிஷாட் பதியுதின் மற்றும் கெளரவ ரவூப் ஹக்கிம் உட்பட்ட ஏனைய முஸ்லீம் பிரதிநிதிகள் இன்னும் சற்று நேரத்தில் பதவி ஏற்கவுள்ளனர்.!!!

பதவி விலகிய முன்னாள் அமைச்சர்களான கெளரவ ரிஷாட் பதியுதின் மற்றும் கெளரவ ரவூப் ஹக்கிம் உட்பட்ட ஏனைய முஸ்லீம் பிரதிநிதிகள் இன்னும் சற்று நேரத்தில் பதவி ஏற்கவுள்ளனர்.!!!




உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து முஸ்லீம் மக்கள் வகை தொகை இன்றி கைது செய்யப்பட்டனர்.

அதனை தொடர்ந்து அவர்களது குடியிருப்புகள் மற்றும் வியாபார ஸ்தலங்கள் என்பன தீக்கிரையாக்கப்பட்டன.

இவை அனைத்தையும் கடந்து முஸ்லீம் அரசியல் தலைமைகள் மீது எண்ணுக்கணக்கற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது மட்டுமன்றி அவர்களுக்கு எதிரான சக்திகள் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் உண்ணாவிரதம் என பல வகைகளில் போராட்டங்கள் வெடித்தன.

அவர்களின் மதத்துக்கு எதிராகவும் அம் மக்களுக்கு விரோதம் விளைவிக்கும் வகையிலும் பல சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டது நிதர்சனமானது.

இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் துயரங்களையும் கடந்து முஸ்லீம் மக்கள் மீது குப்பை மேடாக குவித்திருந்தது எதிர்ப்பு நடவடிக்கைகள்.

இம் மக்கள் தமது அன்றாட செயற்பாடுகளை கூட சுதந்திரமான முறையில்  செயற்பட முடியாத துர்ப்பாக்கிய நிலை காணப்பட்டன.

இவற்றை எல்லாம் கடந்து கைது செய்பட்ட அப்பாவி மக்களை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர் முஸ்லீம் அரசியல் தலைமைகள்.

இன்னும் சற்று நேரத்தில் பதவி விலகிய முன்னாள் அமைச்சர்களான கெளரவ ரிஷாட் பதியுதின் மற்றும் கெளரவ ரவூப் ஹக்கிம் உட்பட்ட ஏனைய முஸ்லீம் பிரதிநிதிகள் பதவி ஏற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.







No comments