Header Ads

test

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை வழிமறித்த போக்குவரத்து பொலிசார்.

 நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா  அனுராதபுரம் - ரம்பேவ பகுதியில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் குழுவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

தனது வாகனத்தில் VIP விளக்குகளைப் பயன்படுத்தி ஏனைய வாகனங்களுக்கு இடையூறாக வாகனம் செலுத்தியதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் வாகனத்தை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதன் காரணமாக, கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிகளுடன் நாடாளுமன்ற உறுப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார், அப்போது பொலிஸ் அதிகாரிகள் அவரது அடையாள அட்டை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரத்தை கோரியுள்ளனர்.

எனினும் பொலிஸாரிடம்  ஆவணங்களை வழங்க மறுத்து, இடையூறு விளைவிக்கும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா நடந்து கொண்டதாக தெரியவருகிறது.

இன்றையதினம் நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில், அர்ச்சுனா எம்.பி இன்று (21) காலை நாடாளுமன்றத்திற்கு சென்று கொண்டிருக்கும் போதே இச் சம்பவத்தை அவர் எதிர்கொண்டுள்ளார்.


No comments