மின்சார கட்டணம் குறைப்பு தொடர்பில் வெளிவந்துள்ள தகவல்.
மின்சார கட்டணம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 20 சதவீதத்தால் மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, வீட்டுப் பிரிவின் கீழ், 0-30க்கு இடைப்பட்ட அலகுக்கான கட்டணம் 6 ரூபாயில் இருந்து 4 ரூபாவாகவும், 31-60க்கு இடையில் 9 ரூபாவிலிருந்து 6 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
மின்சார கட்டண திருத்தம் தொடர்பான இறுதி அறிக்கையை நேற்று (17) வெளியிட்ட இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி 20% மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வீட்டுப்பாவனையின் போதானது,
👉0 – 30 அலகுகளுக்கு 29%
👉31 – 60 அலகுகளுக்கு 28%
👉61 – 90 அலகுகளுக்கு 19%
👉91 – 180 அலகுகளுக்கு 18%
👉180 அலகுகளுக்கு மேல் 19% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுத் தேவை கருதிய மின் பாவனையாளர்களுக்கு 12%
அரச நிறுவனங்களுக்கு 11%
ஹோட்டல் துறைக்கு 31%
வழிபாட்டுத்தலங்களுக்கு 21%
தொழிற்துறைக்கு 30%
வீதி விளக்குகளுக்கு 11%
மொத்த விலைக் குறைப்பு 20% ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைகள் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment