Header Ads

test

இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து - 40க்கும் மேற்பட்டோர் படுகாயம்.

 மாத்தறையில் உள்ள பகுதியொன்றில் இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து சம்பவம் தங்கல்ல பிரதான வீதியின் கந்தர தலல்ல பகுதியில் இன்றைய தினம் (19-01-2025) காலை இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 6 பேர் சிகிச்சைக்காக மாத்தறை பொது வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

எம்பிலிப்பிட்டியவில் இருந்து மாத்தறைக்கும், மாத்தறையில் இருந்து தங்காலை நோக்கி பயணித்த இரண்டு பஸ்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


No comments