Header Ads

test

யாழில் இன்று திறந்துவைக்கப்படவுள்ள எரியூட்டி.

 யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்காக கோம்பயன்மணல் இந்து மயானத்தில் நிறுவப்பட்டுள்ள எரியூட்டி இன்று (29) திறந்துவைக்கப்படவுள்ளது.

இந்த நிகழ்வு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் இன்று முற்பகல் 10 மணி முதல் இடம்பெறவுள்ளது.

குறித்த எரியூட்டி ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 40 மில்லியன் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதில் பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டிருந்தன. அத்துடன், குறித்த எரியூட்டியை நிறுவுவதற்கான இடத்தை தெரிவு செய்வதில் இழுபறி நிலையும் காணப்பட்டது.

இதனையடுத்து யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்திற்கமைய கோம்பயன்மணல் மயான நிர்வாகம் என்பவற்றின் அனுமதியுடன் குறித்த பகுதியில் எரியூட்டி நிறுவப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 


No comments