மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் 3 பேர் வைத்தியசாலையில் அனுமதி.
திருகோணமலையில் உள்ள தேசிய பாடசாலை ஒன்றில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் இன்றைய தினம் (04-04-2023) பெற்றுள்ளது.
மஹதிவுல்வெவ தேசிய பாடசாலையில் 10 தரம் மற்றும் 11 தரம் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் அதே பகுதியைச் சேர்ந்த மூவர் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
6 ஆம் வகுப்பிற்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு இன்று இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
இருந்த போதிலும் முதியன்சலாகே நிரஞ்லா ஜெயவீர என்ற பெண் தனது மகனை பதினோராம் தர மாணவர்கள் தாக்கியதாக மொரவெவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதே நேரம் தாக்கியதாக கூறப்படும் மாணவர்களும் தாக்குதலுக்குள்ளான மாணவரொருவரும் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
Post a Comment