Header Ads

test

யாழில் இடம்பெற்ற திடுக்கிடும் சம்பவம் - சொந்த வீட்டிற்கு தீ வைத்த குடும்பஸ்த்தர்.

 மனைவியுடன் முரண்பட்டு தாம் குடியிருக்கும் வீட்டினைத் தீ வைத்து கொளுத்திய சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம் அச்சுவேலிபாரதி வீதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் போதையில் வீட்டிற்கு வந்ததுடன் மனைவி,பிள்ளைகளுடன் சண்டையிட்டதுடன் அவர்களை வீட்டின் வெளியே துரத்திய பின்னர் வீட்டினை பூட்டி வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து உடைத்துள்ளார்.

மேலும் தெரியவருவது,

கடுமையான கோபத்திற்குள்ளான நபர் தாம் குடியிருந்த வீட்டிற்கு தீ வைத்துள்ளார். வீட்டில் தீ பரவியதை அடுத்து அயலவர்கள் ஒன்று கூடி பலத்த சிரமத்தின் மத்தியில் தீயினை அணைத்த போதிலும் வீடு பகுதியளவில் எரிந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் வீட்டிற்கு தீ வைத்த குற்றச்சாட்டில் குடும்பஸ்தரை கைது செய்துள்ளனர். 


No comments